வெள்ளத்தில் மூழ்கிய கிளிநொச்சியின் தாழ் நிலப் பகுதிகள்!!
கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்களின் வீடுகளுக்குள்ளும் மழை நீர் சென்றுள்ளது.
கடந்த காலத்தில் நிரந்தர வீட்டுத்திட்டங்களுக்கு உள் வாங்கப்பட்டு ஆரம்ப கட்டக் கொடுப்பனவுகள் மட்டும் வழங்கப்பட்டு மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாதுள்ள மக்கள் பெய்து வருகின்ற மழை காரணமாக நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.