ஸ்ரீலங்காவை தீவிரமாக கண்காணிக்கும் இந்தியாவின் ஆளில்லா விமானங்கள்! பின்னணி என்ன??
நாட்டின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளில்லா விமான கருவிகள் பயன்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு ஆளில்லா விமான கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்திய கடற்படையின் உப பிரதானி அசோக் குமார் தெரிவித்தார்.
சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமது நாட்டின் பாதுகாப்பு கருதி ஆளில்லா விமான கருவிகள் பயன்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் நேற்று கருத்துரைத்திருந்தார். அதன்போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.