தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது புதிய கொரோனா வைரஸ் திரிபு….. சுகாதார அமைச்சு அதிரடி முடிவு!!

தென்னாபிரிக்காவில் அடையாளம் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்க்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய ,

தென்னாபிரிக்கா, அங்கோலா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், லெசோதோ, சிம்பாப்வே, சுவிட்ஸர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த தடை பொருந்தும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், குறித்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் இருப்பார்களாயின், உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய கொரோனா திரிபு வைரஸ் பரவிய நாடுகளை பிரித்தானியா, ஜப்பான், ஜேர்மனி, இத்தாலி, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர்  போன்ற நாடுகள் சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *