11,000 தொன் அரிசியுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்!!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 40,000 தொன் அரிசியில் இருந்து 11,000 தொன் அரிசியை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நேற்று (12/04/2022) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இதன்படி,

7000 தொன் நாட்டு அரிசி, 2000 தொன் சம்பா அரிசி, 2000 தொன் சிவப்பு அரிசி உட்பட அண்ணளவாக நான்கு நாட்களுக்குள் இந்தியாவின் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து இந்த அரிசித் தொகை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அரசாங்க வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் யோகா பெரேரா உட்பட வர்த்தக அமைச்சின் பிரதிநிதிகள் குழுவிடம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாக அரிசியை கையளித்தனர்.

அதன்படி,

நாடளாவிய ரீதியில் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக ஒரு கிலோ சம்பா அரிசி 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ நாட்டு அரிசி 110 ரூபாவிற்கும், ஒரு கிலோ சிவப்பு அரிசி 110 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த கடன் திட்டத்தின் கீழ் எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு அரிசித் தொகை நாட்டிற்கு வரவுள்ளதுடன் அரசாங்க விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக நுகர்வோருக்கு குறைந்த விலையில் அந்த அரிசி விநியோகிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *