பாடசாலைகளின் மீள் ஆரம்பம் தொடர்பில்….. கல்வியமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு!!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று(25/07/2022) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில்,
மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், வலய பொறுப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பமாவது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,
மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும்.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.