பாடசாலை சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு….. மரம் ஒன்றில் கட்டியிருந்த நிலையில் மீட்பு!!

பாடசாலை மாணவி ஒருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

10 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரே கை, கால்கள் கட்டப்பட்டு மரம் ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிறுமி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயல்வெளியில் உள்ள மரம் ஒன்றில் சிறுமி கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இருப்பதை அவதானித்த மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

தகவல் கிடைத்ததையடுத்து கல்லஞ்சிய காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியை மீட்டுள்ளனர்.

அதனையடுத்து,

மாணவி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்லஞ்சிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமி தொடர்பான மருத்துவ அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில்

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *