ரயில் போக்குவரத்துக்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!!

மேல் மாகாணத்துக்குள் இயங்கும் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதி முகாமையாளர் காமினி செனேவிரத்ன தெரிவித்துள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மேல் மாகாணத்தில் 103 புகையிரத சேவைகள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

எனினும் கடுமையான சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *