பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல்…. முச்சக்கரவண்டி அலங்கரிக்க அனுமதி!!

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி உரிமையாளர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கலந்துரையாடலின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் இதில் கலந்து கொண்டார்.

முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பது தொடர்பான பல விதிகளை திருத்தி ஓகஸ்ட் 14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக இதற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *