இலங்கையர்கள் அனைவரிடமும் ஜனாதிபதி கோட்டாபய Twitter வழியாக கோரிக்கை!!

இலங்கையர்கள் அனைவரிடமும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில்

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது.

இன மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஜனாதிபதி அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *