ஜனாதிபதி, பிரதமரை ஒருமையில் விளித்து ‘வெளுத்து வாங்கிய பௌத்த தேரர்’ !!!!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் ஆட்சியாளர்களை காரசாரமாக விமர்சிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்து வரும் காணொளியில் கருத்து வெளியிட்டுள்ள பௌத்த தேரர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை ஒருமையில் விளித்து கருத்து வெளியிட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எருமைகள் என விமர்சித்துள்ளார்.