கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கலில் குறைபாடு – மருத்துவ நிபுணர்கள் குற்றச்சாட்டு!!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு வினைத்திறனற்று இடம்பெறுவதாக மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர்கள் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த மாதம் நிறைவடையும்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய, தகைமைபெறும் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை ஆரம்பித்திருக்க வேண்டும்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியாகும்போது, தகைமையுடைய அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளையும் வழங்கி நிறைவு செய்ய வேண்டும்.

இதனை செயற்படுத்த முடியாவிட்டால், தாங்கள் செயற்படுத்தித் தருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *