இந்திய ரூபாயில் 125 கோடிக்கு OTT இல் விலைபோனது “பொன்னியின் செல்வன்”!!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்“.

இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,

பொன்னியின் செல்வன்” படத்தை இந்திய ரூபாயில் 125 கோடி விலை கொடுத்து அமேசான் ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,

இதுவரை இவ்வளவு பெரிய விலை கொடுத்து எந்த படமும் வாங்கப்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *