பைசர் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பில் பாரிய சிக்கல்கள்….. பேராசிரியர் திஸ்ஸ விதாரண!!
கொவிட் வைரஸைக் கட்டுப்படுத்த இலங்கையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பைசர் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண(tissa-vitharana) தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த தடுப்பூசியை பயன்படுத்தியவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அண்மைக்கால சோதனைகளில் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பல பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.
எனவே, பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்வதை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு சுகாதார அமைச்சிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது, பைசர் தடுப்பூசியைப் பயன்படுத்தி முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.