எரிபாருள் பெறுவதில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிவு!!
தற்போது தட்டுப்பாடாக உள்ள எரிபாருளை பெறுவதில் ஏற்பட்ட மோதல் இறுதியில் கொலையில் முடிவடைந்தது. நிட்டம்புவ – ஹொரகொல்ல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று(20) ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதி, எரிபொருளை பெற்று பயணித்துக் கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை வழிமறித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.