ஒக்ஸ்போட் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது இங்கிலாந்து

ஒக்ஸ்போட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இங்கிலாந்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இது ஒரு முக்கிய திருப்புமுனை எனத் தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் நோய்த்தடுப்பு பிரசாரத்தில் பாரிய விரிவாக்கத்திற்கு இது வழிவகுக்கும், இது மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

50 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அஸ்ட்ராஜெனெகாவிடமிருந்து 100 மில்லியன் தடுப்பூசிகளுக்கு இங்கிலாந்து விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *