யாழ் தொண்டமானாறு – அக்கரை கடலில் மூழ்கி ஒருவர் பலி!!
யாழ்ப்பாணம் அச்சுவேலி அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (09/08/2023) மீட்கப்பட்டுள்ளது.
கெருடாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சிவராசா என்ற 75 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.