நெல்லியடியில் திறந்துவைக்கப்பட்ட KFC அலைமோதும் மக்கள்!!
யாழ் பருத்தித்துறை வீதி நெல்லியடியில் இன்றைய தினம் (03/07/2024) KFC நிறுவனத்தின் கிளை திறந்துவைக்கப்பட்டது. திறந்த சற்று நேரத்தில் அதிகமான மக்கள் வருகை தந்து தங்களின் விருப்ப KFC சிக்கன் வாங்கி சென்ற வண்ணம் உள்ளார்கள்.
பலதரப்பட்ட முக்கியமான நகரங்களில் அமையப்பெற்றுள்ள KFC நிறுவனம் இப்போது அதிகளவான மக்கள் செறிந்து வாழும் வடமராட்சி பிரதேசத்திள் தங்களின் கிளையினை ஸ்தாபித்து வாடிக்கையாளர்களுக்கு KFC சிக்கன் விருந்தளித்துள்ளார்கள்.
திறந்து வைக்கப்பட்ட சற்று நேரத்திலையே அதிக மக்கள் குவிந்து KFC சிக்கன் கொள்வனவு செய்த வண்ணம் உள்ளார்கள். அத்தோடு,
KFC சிக்கன் வாங்க இனி யாழ்ப்பாணம் போகத்தேவையில்லை என்ற சந்தோஷத்தையும் கொண்டாடி வருகின்றார்கள்.