பிரித்தானியாவில் முதல் முறையாக தேசிய அவசர நிலை அறிவிப்பு!!
பிரித்தானியாவில் எதிர்வரும் வாரம் வெப்பநிலை உயரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையினால் முதல் முறையாக தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் இங்கிலாந்துப் பிராந்தியத்தில் எதிர்வரும் வாரம் 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும் என்பதால் முதல் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன், மென்செஸ்டர் மற்றும் யோர்க் பகுதிகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால்,
தொடருந்து பாதைகளில் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதுடன் சில பாடசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன்,

சில வைத்தியசாலைகளில் சில சந்திப்புக்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால்,
பொதுமக்களை வெளியில் நடமாட வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
