மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து- அதில் பயணித்தவர்களின் நிலை?

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த வாகன விபத்து இன்று காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வான் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதி நோக்கி சென்ற மற்றுமொரு வான்டன் மோதி விபத்துக்குள்ளாகி, அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இவ்விபத்தில் குடைசாய்ந்த வானில் பயணித்த நால்வரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வானில் ஏற்பட்ட இயந்திர கோளாறே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *