பல அரிசி ஆலைகள், கடைகள் சீல் – திடீர் சுற்றிவளைப்பு!!

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள், வர்த்தக நிலையங்கள் கடந்த இரு தினங்களாக  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி நேற்று (27) முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பல கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

பொருட்கள் விற்பனையின் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது, மேலதிக கட்டணங்கள் அறவிடுவது, பொருட்களை பதுக்கி வைப்பது தொடர்பாக பொது மக்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து,

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி சாலின்ட பண்டார தலைமையிலான குழுவினரால் இத் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன்.

ஒரு சில வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற் கொள்ளவுள்ளதாக அவர் இதன் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *