மின்னல் தாக்குதலில் ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு!!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது  ஆனமடுவ, பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் உயிரிழந்த குறித்த சிறுவன் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்றுள்ளார். இதன் போது குறித்த சிறுவன் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பி.சி.ஆர்.பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னரே மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் ஆனமடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *