வெடித்துச் சிதறிய Gas அடுப்பு!!

மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் காஸ் அடுப்பு  வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தலவாக்கலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேநீர் தயாரிப்பதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை, நிறுத்திவிட்டு  வெளியில் சென்ற ஒரு நொடியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தள்ளார்.

வெடிப்பை அடுத்து காஸ் அடுப்பு முழுமையாக சேதமமைந்துள்ளதுடன், அதன்பின்னர் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்ததாக வீட்டீன் உரிமையாளர் வேலுசாமி ஸ்ரீநாத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *