வெடிபொருட்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!!

வெடிபொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொட்டாசியம் பெர்குளோரேட் (Potassium perchlorate) என்ற வெடிபொருட்களுடன் வாடகை வாகன சாரதியான குறித்த நபர், விமான நிலைய காவல்துறையினரால் சிற்றூர்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 25 கிலோகிராம் பொட்டாசியம் பெர்குளோரேட் வெடிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறை முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

குறித்த சிற்றூர்தியின் உரிமையாளர், நீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரென விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விமான நிலையத்தில் தமது வாடகை வாகனத்தின் பயணம் நிறைவடைய உள்ள நிலையில், தாம் சிற்றூர்தியை விமான நிலையம் நோக்கி விரைவாக செலுத்தியமையால், அதிலிருந்த வெடிபொருளை அகற்ற மறந்துவிட்டதாகவும், சந்தேகநபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *