இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின்கீழ் இலங்கையை வந்தடைந்த எரிபொருள் கப்பல்!!

இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவித் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு முதலாவது டீசல் ஏற்றிய கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி,

35,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல், கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளது.

 

குறித்த கப்பலிலிருந்து டீசலை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில்

இந்தியாவினால் முதல் கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *