இலங்கையில் கொரோனா தொற்றினால் இன்றும் இருவர் மரணம்!
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி கொழும்பு 12ஐ சேர்ந்த 54வயது மற்றும் மீகொடயை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றறைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றாளர்கள் 5பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.