இலகு முறையில் கடவுச்சீட்டு….. இன்று முதல் புதிய நடைமுறை!!
கடவுச்சீட்டுகளை இலகுவான வழியில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவை மூலம் வீட்டுக்கு பெற்றுக்கொடுக்க முடியும்.
பிரதேச செயலகங்களில் செயற்படும் ஆட்பதிவு திணைக்களத்தில் கைவிரல் அடையாளங்களை விண்ணப்பதாரிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு நாளில் கடவுச்சீட்டை வழங்கும் சேவை வழமைப்போல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.