சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில்….. பரீட்சைகள் வெளியிட்டுள்ள திணைக்களம் முக்கிய அறிவிப்பு!!
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் மாத காலப்பகுதியில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,/
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் (28/08/2022) வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.