எரிபொருள் விநியோகம் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்ற எரிசக்தி அமைச்சர் வெளியிடட தகவல்….. வாகனதாரர்கள் பெரும் மகிழ்ச்சியில்!!

நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) வழமைக்கு திரும்புமென எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே (Gamini Lokuge) தெரிவித்தார்.

நேற்றைய தினம் எரிசக்தி அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஆயினும்,

நேற்றைய தினமும் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *