8 மில்லியன் ரூபா செலவில் அனர்த்த தடுப்பு செயற்திட்டங்கள் முல்லைத்தீவில்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 மில்லியன் ரூபா செலவில் அனர்த்த தடுப்பு செயற்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல் கட்டமாக இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளத்தின் கீழ் நீர்பாயும் பகுதி அனர்தத்தினை தடுக்கும் நோக்கில் புனரமைப்பு பணிகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

வவுனிக்குளத்தின் கீழ் வெள்ள அனர்த்தத்தில் இருந்து விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த புனரமைப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செயற்திட்டத்தின் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்  கலந்துகொண்டு தொடக்கிவைத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வெள்ளம் ,வறட்சி தடுப்பதற்கான திட்டங்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடல்தண்ணீர் உள்வராமல் செம்மலைமற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அணைக்கட்டு போடப்பட்டுள்ளது.

இது விவசாயிகளுக்குரிய குளம், வாய்க்கால்களை இயன்றளவு துப்பரவு செய்யவேண்டும் அரசாங்கம் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்யும் என்று பார்க்ககூடாது.

துப்பரவு செய்யாத காரணத்தில்தான் பாரிய அனர்த்தங்களை எதிர்கொள்கின்றோம் எதிர்காலத்தில் இதன் ஊடாக பாரிய அனர்த்தம் ஏற்படாமல் தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *