கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோரை கைது செய்ய முடியாது – சுமந்திரன் எம்.பி!!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோரை கைது செய்ய முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா அரச தரப்பின் உதவியுடன் யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை மிகுந்த கவலையுடன் நினைவுகூருவதாக குறிப்பிட்டார்.

இதன்போது, ஸ்ரீலங்கா வாழ் மக்களுக்காக புலம்பெயர் சொந்தங்கள் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கொள்வனவு செய்து வழங்க முன்வந்துள்ளமைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *