கொவிட் தடுப்பூசி அட்டை இன்றி பயணம் செய்ய முடியாதா? வெளியானது உண்மைத் தகவல்

கொவிட் தடுப்பூசி அட்டை இல்லாதவர்கள் மன்னார் மற்றும் பலாங்கொட பகுதி நகரங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகி இருந்த போதிலும் அவ்வாறான எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமாயின், அதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான அட்டை இல்லாதவர்களை கடந்த சில தினங்களாக வீதி கடவைகளை கடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹேமந்த ஹேரத்,

சுகாதார அமைச்சினால் அவ்வாறான அறிவிப்புக்கள் பிறப்பிக்கப்படவில்லை என கூறினார். எனினும், நாட்டிலுள்ள வேறு ஏதேனும் சட்டங்களின் பிரகாரம், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால், அதற்கு தாம் பொறுப்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *