கொரேனாவால் இன்றும் இருவர் உயிரிழப்பு – புதிய தொற்றாளர்களின் தொகையும் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

73 மற்றும் 65 வயதைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தவர்களாவர்.

இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்றையதினம் புதிதாக 655பேர் தொற்றுக்குள்ளான நிலையில் கண்டறியப்பட்டுள்ளனர். இதன்மூலம் தற்போது 9,017 நோயாளிகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *