கொழும்பு வெள்ளவத்தையில் மூடப்பட்டது தனியார் வங்கி
கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள பிரபல தனியார் வங்கி ஒன்று சற்று முன்னர் மூடப்பட்டுள்ளது.
குறித்த வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து குறிப்பிட்ட வங்கிக் கிளை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வங்கி ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.