கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்
கொழும்பின் சில பகுதிகளில் வார இறுதியில் நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை ஒன்பது மணி நேரம் மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.