தேங்காய் விலை தொடர்பில் புதிய வர்த்தமானி!!
தேங்காய்க்கு விதிக்கப்பட்டிருந்த ஆகக்கூடிய சில்லறை விலை உத்தரவு நுகர்வோர் அதிகார சபையால் நீக்கப்பட்டுள்ளது.
2020 செப்டெம்பர் 25ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானியில் தேங்காய்க்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது.
அதில் தேங்காயின் அளவை பொறுத்து விலை தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து நேற்று புதிய வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.