“ஷவர்மா” சாப்பிட்ட பலர் மயக்கம்….. 16 வயது மாணவி மரணம்!!
கேரளாவில், காசர்கோடு மாவட்டத்தில் ‘ஷவர்மா’ (Shawarma) சாப்பிட்ட பலர் மயக்கம் அடைந்தனர்.
கிட்டத்தட்ட 40 பேர் மயக்கம் அடைந்து வாந்தி எடுத்தனர்.
எல்லோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
16 வயது மாணவி தேவானந்தா உயிரிழந்தார்.
இச்சம்பவம் கேரளாவையே உலுக்கிய நிலையில் ஷவர்மா கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில்,
தற்போது பிரேத பரிசோதனையின் முடிவில் உடலில் கிருமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கிருமியானது ‘ஷிகெல்லா பாக்டீரியா’ எனக்கூறப்படுகிறது.
இவை குடலை பாதித்து வேகமாக உடலில் பரவ கூடியது.
பொதுவாக கெட்டுப்போன உணவு, நீர் மூலம் இந்த கிருமி பரவும் வாய்ப்புகள் உள்ளன என மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.