யாழ் நாகர்கோவில் பகுதியில் இரு தரப்பு மோதல்….. துப்பாக்கி சூடு நடந்தது என கூறும் மக்கள் – மறுக்கும் காவல்துறை!!

நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை நேற்று திங்கட்கிழமை (13/03/2023) பெரும் கலவரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு வருமாறு காவல்துறையினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவிலில் மயானம் ஒன்றின் மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(14/03/2023) நடைபெறவிருந்தது. அந்த நிகழ்வுடன் தொடர்புடைய புலம்பெயர்வாசி ஒருவர் மீது நேற்றுமுன்தினம்(12/03/2023) தாக்குதல் நடத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகிறது. அது Read More

Read more

மீண்டும் ஜப்பான் கடற்பரப்பில் ஏவுகணையை பரிசோதித்தது வட கொரியா….. நிலையற்ற தாக்கம் என அமெரிக்கா எச்சரிக்கை!!

வட கொரியா மீண்டும் கடலோர நகரமான சின்போவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் உதவியுடன் ஏவுகணையை ஜப்பான் கடற்பரப்பில் ஏவியுள்ளது என்று தென் கொரிய கூட்டுப் பணியாளர்கள் (JCS)தெரிவித்துள்ளனர். தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் இராணுவ பயிற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏவுகணை ஏவப்பட்டு இருப்பதாக JCS தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணை இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், “கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில், நமது ராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பில் முழு தயார் Read More

Read more

யாழில் பிரபல ஆண்கள் பாடசாலையினுள் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த மாணவன்….. ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!!

யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்கொலை  முயற்சியிலிருந்து தப்பிய மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருப்பதாக வைத்தியசாலை வட்டரங்களில் இருந்து அறிய முடிகிறது. இந்தச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று(13/03/2023) நண்பகல் குறித்த மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்குடன் Read More

Read more

இலங்கைக்கு IMF இடமிருந்து 300 கோடி அமெரிக்க டொலர் நிதி!!

நான்கு வருடங்களுக்குள் எட்டுத் தடவைகளில் 300 கோடி அமெரிக்க டொலர் நிதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கிடைக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பொருளாதார உத்தரவாதம் மாத்திரமே கிடைக்கப் பெறவுள்ளதாக பொருளியல்த்துறை பேராசிரியர் ஒருவர் வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மத்திய வங்கியும் அரசாங்கமும் செயற்கையற்ற ரீதியாக ரூபாவின் பெறுமானத்தை பலப்படுத்தியிருப்பதாக முன்வைக்கப்படும் கூற்றை, ராஜாங்க அமைச்சர் மறுத்துள்ளார். டொலரின் பெறுமதி குறைந்து ரூபாவின் பெறுமதி பலமடைந்திருப்பதால் Read More

Read more

ஜுன் மாதம் பேரூந்து கட்டணக் குறைப்பு இடம்பெறக்கூடும்….. தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்!!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில், எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் ஜுன் மாதம் இடம்பெறவுள்ள பேரூந்து கட்டண திருத்தத்தில் கட்டணக் குறைப்பு இடம்பெறக்கூடும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து  அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்தொன்றை முன்வைத்துள்ளார். மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலேயே தேசிய பேரூந்து கட்டண சூத்திரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். “டொலரின் பெறுமதி மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் இந்த நிலைமை Read More

Read more

ஜோ பைடன் உக்ரைனுக்கு விஜயம்….. உக்ரைனில் இரவு முழுவதும் குண்டுமழை பொழிந்த ரஷ்ய இராணுவம்!!

ஜோ பைடனின் உக்ரைன் விஜயத்தின் பின்னர் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் உட்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷ்ய இராணுவம் மின் உற்பத்தி நிலையங்கள், இராணுவ தளங்களை குறிவைத்து இந்த தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ரஷ்ய இராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக உக்ரைனின் முக்கிய நகரங்களில் Read More

Read more

TikTok செயலி யில் ஒரு மணிநேரத்துக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் புதிய Update!!

18 வயதிற்குட்பட்டவர்கள் TikTok செயலியை ஒரு மணிநேரத்துக்கு மட்டும் பயன்படுத்தும் வகையிலான புதிய கட்டுப்பாட்டை கொண்டுவரப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பதின்ம வயதினர் நீண்டநேரம் இந்தச் செயலியை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய நடைமுறை வரவுள்ளது. இளைய தலைமுறை பயனாளிகளின் Digital எனப்படும் எண்ணியல் வாழ்வை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் வரவுள்ளதாக ரிக்டொக் அறிவித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தத் திட்டத்தினால் 18 வயதுக்கு உட்பட்ட பயனாளிகளின் TikTok  திரைநேர கணக்குகள் Read More

Read more

பூமியுடன் மோத வாய்ப்புள்ள விண்கல்…..  நாசா அதிரடி அறிவிப்பு!!

2046 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் விண்கல் ஒன்றை  நாசா பின்தொடர்ந்து வருகிறது. 2023 DW எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் 2046 ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 2 ஆம்  திகதி இவ்விண்கல் முதன்முதலில் அவதானிக்கப்பட்டது. இது 160 அடி (48.7 மீற்றர்) விட்டமுடையதாக இருந்தது என நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 18 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் Read More

Read more

கனடாவிலும் பாடசாலைகளில் சாதி ஒடுக்குமுறைகள்….. அகற்றபட வேண்டுமென பிரேரணை சமர்ப்பியதுள்ள இலங்கைத் தமிழ் பூர்வீக பெண்!!

கனடாவில் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் சாதி ஒடுக்குமுறைகள் அகற்றபட வேண்டுமென பாடசாலைசபை அறக்காப்பாளரும் இலங்கைத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்டவருமான யாழினி ராஜகுலசிங்கம்(Yaazhini Rajagulasingam) கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பிலான பிரேரணை ஒன்றை அவர் றொரன்டோ மாவட்ட பாடசாலை சபையில் சமர்ப்பித்துள்ளார். இந்த பிரேரணைக்கு பாடசாலை சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தென் ஆசிய நாடுகள் ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றினைச் சேர்ந்தவாகள்சாதி முறைமைகளை தீவிரமாக பின்பற்றுவதாகவும் இந்த சமூகங்களில் சாதி ஒடுக்குமுறை தீவிரமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொது கல்வி Read More

Read more

இன்று முதல் 8% வீதத்தால் குறைவடைந்தன விமான பயணச் சீட்டுக்களின் விலைகள்!!

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறது. அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விமான பயணச் சீட்டுக்களின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று(11/03/2023) முதல் பயணச் சீட்டுக்களின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more