TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

55000mt அடிகட்டு பசளை உரம் இலங்கைக்கு – அவை இலவசமாக விவசாயிகளுக்கு….. தேர்தல் நெருங்குகிறது என சாடையில் கிசுகிசுக்கள்!!

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55000 மெற்றிக் தொன் அடிகட்டு பசளை உரம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்துடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உர இருப்பு கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கைக் காலங்களுக்குத் தேவையான அடிகட்டு பசளை உரங்கள் இந்தப் பருவத்திலிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

ரஷ்யாவில் தொடர்ந்து சக்திவாய்ந்த பல நிலநடுக்கங்கள்….. சுனாமி எச்சரிக்கை!!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்(Earthquake in Russia) ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று(18/08/2024) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கத்தையடுத்து, அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்த போதிலும் பின்னர் அது சுனாமி நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

அரச ஊழியர்களின் 25000 ரூபாய் சம்பள அதிகரிப்பு விடயம்….. உண்மை நிலை என்ன!!

அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025 ஆம் ஆண்டு முதல் 25,000 ரூபாவால் அதிகரிக்கும் அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்திற்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் குறித்த முடிவானதுஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் சுதந்திரமான வாக்களிப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை சுயாதீன கண்காணிப்பாளர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் (Election Commission) முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் கடந்த சில மாதங்களில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை….. மழை நிலைமை மேலும் தொடருமா!!

இலங்கையை(Sri Lanka) சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நேற்று (17/08/2024) மாலை 4 மணி முதல் இன்று (18/08/2024) மாலை 4 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மண்சரிவு ஏற்பட்ட இடங்கள், குறிப்பாக மலைப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்துமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேல், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

புதிய இடத்தில் திறந்து வைக்க குடியகல்வு குடிவரவு திணைக்கள அலுவலம்!!

குடியகல்வு குடிவரவு திணைக்க வவுனியா அலுவலகமானது வவுனியா(Department of Immigration Vavuniya Office – Vavuniya) மன்னார் வீதியில்(Mannar road) புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது இன்று (16/08/2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிடிய மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் குறித்த கட்டிடமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் இயங்கி வந்த இந்த அலுவலகத்தை இடவசதி மற்றும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

Port City இல் சர்வதேச பாடசாலைகள், பல்கலைக்கழகம் மற்றும் வைத்தியசாலைகளிற்கு அமைச்சரவை அனுமதி!!

கொழும்பு துறைமுக நகரத்தில்(Colombo Port City) திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திக்காக, காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்ட செயற்பாட்டிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக காணிகளை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் 6(1) (c) Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வீட்டில் பரவிய விஷ வாயு – இருவர் உயிரிழப்பு….. கொழும்பில் சம்பவம்!!

கொழும்பு (Colombo) – மாலபே பகுதியில் வீடொன்றில் விஷ வாயு கசிவினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாலபே ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (13/08/2024) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, 65 மற்றும் 43 வயதான இரண்டு பேரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இரசாயன வகைகளை கலந்த போது வாயு கசிந்து இதனால் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவிப்பு!!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை 2024 ஆம் ஆண்டு நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலை தவணை (16/08/2024) வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது. இதனை  Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இந்த ஆண்டு முதல் அரையாண்டு காலப்பகுதியில் மட்டும் 28 பதின்ம வயது கர்ப்பம் பதிவு!!

இலங்கையில்(Sri lanka) பதின்ம வயது கர்ப்பம் மற்றும் தகாத முறை செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 28 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) அண்மைய தரவுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. அதிகார சபையின் தரவுகளின்படி, பதின்ம வயது கர்ப்பம் பெரும்பாலும் தகாத முறை செயற்பாட்டின் நேரடி விளைவாக குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. 2024 இன் முதல் அரையாண்டில் 28 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2023 ஆம் ஆண்டின் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கருப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தி….. உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி போராட்டம்!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்(Base Hospital – Mannar) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (13/08/2024) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் Read More

Read More