இலங்கையில் சில முக்கிய பொருட்களுக்கு வரி விலக்கு….. நிதி இராஜாங்க அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

இலங்கையில் சில முக்கிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய Twitter பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். විශේෂ අවශ්‍යතා ඇති පුද්ගලයින් භාවිතා කරන උපකරණ සහ දේශිය සහල් නිෂ්පාදනය සමාජ ආරක්ෂණ බද්දෙන් නිදහස් කෙරේ. – මුදල් රාජ්‍ය අමාත්‍ය රංජිත් සියඹලාපිටිය#SriLanka Read More

Read more

அடுத்த iPhone இனை அறிமுக திகதி வெளியீடு….. கொண்டாடும் ஆர்வலர்கள்!!

இந்த மாதம் 12 ஆம் திகதி அப்பிள் நிறுவனம்(Apple Company) அதன் அடுத்த iPhone(iPhone 15) இனை அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் வெகுவான பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இனி அப்பிள் நிறுவனம்(Apple Company) வெளியிட இருக்கும் தனது போன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு USB – type C type Charging port ஐ (charging port) ஐ இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களுக்கு என்று பிரத்தியேகமான சார்ஜிங் போர்ட்டை Read More

Read more

அடுத்த ஆண்டுக்கான உயர்தரப்பரீடசைகள் பிற்போடுவது தொடர்பில் கல்வியமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போட முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினையும், 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தையும் பாதிக்கும் என்பதால் இதனை அனுமதிக்க முடியாது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மீண்டும் உயர்தரப் பரீட்சை எழுத எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு இது நியாயமற்றது என்பதால் அதனைப் பிற்போட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் Read More

Read more

திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு – உயிரிழந்தும் 07 பேராக வாழும் மாணவி….. வெளியாகிய பெறுபேறுகளில் அதிவிசேட சித்திகள்!!

திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3A  பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது. அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளைப் பெற்று Read More

Read more

“தாய்வானை உக்ரைனாக மாற்ற அனுமதிக்க மாட்டேன்…..” ஜனாதிபதி தேர்தல் சுயேச்சை வேட்ப்பாளர் ‘டெர்ரி கோவ்’!!

தாய்வான்(Taiwan) ஜனாதிபதி தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில், பாக்ஸ்கான் நிறுவனர் டெர்ரி கோவ்(Boxcon founder Terry Gove)  தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். உலகின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கானின் தலைமை அலுவலகம் தாய்வானில் உள்ளது. பாக்ஸ்கானின் அப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலைகள்(Apple iPhone manufacturing plants) உலகெங்கும் உள்ளன. இந்நிலையில், தாய்வானின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியை அவர் கடுமையாக விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலும் Read More

Read more

வகுப்பு முடித்து சகோதரிக்காக காத்திருந்த 12 வயது மாணவி பாலியல் வன்புணர்வு….. பிரதி அதிபர் கைது!!

12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது வீட்டில் நடத்தும் வகுப்பில் கலந்துகொண்ட மாணவிகளில் ஒருவரே இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வகுப்பு முடிந்து ஏனைய பிள்ளைகள் சென்ற நிலையில் குறித்த மாணவி தனது சகோதரிக்காக காத்திருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மதியம் 12.30 மணியளவில் வகுப்பு முடிந்ததும் தன்னை Read More

Read more

சற்று முன் வெளியாகின AL பெறுபேறுகள்!!

கடந்த 2022/2023 ஆ‌ம் ஆண்டுக்கான கல்வி பொது தரா தர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகின. பெறுபேறுகளை பார்வையிட இங்கே சொடக்குங்கள்…….

Read more

சிவில் உடையில் இருந்த காவல்துறையினரால்….. ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய மாணவர்களின் உள்ளாடைகளை நீக்கி சோதனை!!

சிவில் உடையில் இருந்த ஈச்சிலம்பற்று காவல்துறையினரால் வெருகல் முருகன் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய மாணவர்கள் உள்ளாடை களையப்பட்டு சோதனையிடப்பட்டதுடன் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது என பிரபல உள்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று(02/09/2023) அன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வெருகல் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற வெருகலம்பதியான் முருகன் ஆலயத்தில் வருடார்ந்த திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் மாவடிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த மாவடிச்சேனை பாடசாலையில் 09, 10, 11 ஆம் ஆண்டுகளில் Read More

Read more

சரக்கு வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி….. சாதாரண மோட்டார் வாகன இறக்குமதிக்கான இறக்குமதிக்கு முட்டுகட்டை!!

இலங்கையின் உள்நாட்டு சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரித்து செல்வதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் அண்மையில் பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், சாதாரண மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் இன்னமும் வழங்கவில்லை. இந்த நிலையினால், நாட்டில் மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, உள்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் Read More

Read more

விளையாட்டு நிகழ்வு முடிந்ததும் காணாமல்போன….. சிறுவர் இல்லத்தில் இருந்த16 வயது சிறுமி!!

சிறுவர் இல்லத்தில் இருந்த 16 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவர் இல்லத்தின் விடுதி பொறுப்பாளர் குளியாப்பிட்டிய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். ஹலவத்த – கட்டுபொத்த எரோமா சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியே காணாமல் போயுள்ளார். மஹவ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறுமி இந்த சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வடமேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லங்களின் சிறுவர்கள் பங்குபற்றிய விளையாட்டு நிகழ்வு நேற்று (02/09/2023) குளியாபிட்டிய ஷில்பா ஷாலிகா விளையாட்டரங்கில் Read More

Read more