மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரிப்பு!!

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சரிபார்த்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிபருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் ஆகியோர் அந்தக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன் Read More

Read more

ஆசிரியரின் மோசமான தாக்குதல்….. படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!!

ஆசிரியரின் மோசமான தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் குறித்த ஆசிரியர் தமது மகனான மாணவனை பலமுறை அடித்துள்ளதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

Read more

கணவனுக்கு  2 ஆவது திருமணம் செய்து வைக்கும் முதல் மனைவி….. விநோத நடைமுறை!!

கணவனுக்கு  2 ஆவது திருமணம் செய்து வைக்கும் விநோத நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், ராம்தேவ் கிராமத்து மக்கள் தங்களது பழமையான பழக்க வழக்கங்களை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர். குறிப்பாக, முதல் மனைவி தனது கணவனின் இரண்டாவது மனைவியை வரவேற்கிறார். திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதலில் திருமணம் செய்து வந்த பெண்ணே செய்கிறார். அதனைத் தொடர்ந்து, இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் சகோதரிகளை Read More

Read more

நாட்டில் அடுத்த ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும்!!

இலங்கையில் அடுத்த  ஆண்டில் (2024) பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார். அரசு மறைமுக வரிகள் மூலம் 72 சதவீதம் கூடுதல் வருவாயை எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாதீட்டு ஆவணத்தின்படி 122400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Read More

Read more

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்!!

சர்வதேச கிரிக்கட் சபையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையுடன் தடையை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சபையுடனான பேச்சுவார்த்தைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று சபைக்கும் இலங்கைக்கு வருமாறு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Read more

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் தகவல்!!

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01.11.2023) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2022 பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான கட்ஆஃப் (Cut-off) புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  வரலாற்றில் முதல் தடவை இவ்வாறு வெளியிடப்பட்டால் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியானவையாக கருதப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகளும் கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

Read more

திருகோணமலையில் சட்டவிரோதமான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!!

சட்டவிரோதமான வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை திருகோணமலையில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (23/11/2023) கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தும் வர்த்தக வெடிபொருட்களான தண்ணீர் ஜெல் குச்சிகள் மற்றும் மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் இந்த கைதின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கடற்படைக் கட்டளைத் தளபதிகளான வலகம்ப மற்றும் Read More

Read more

5 கோடிக்கும் ஆதிகமான ரூபா பணத்துடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் பெண் ஒருவர் உட்பட இருவர் பண்டாரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்குகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பிற பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை மாற்றியமை குறித்து காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பண்டாரகம பகுதியில் உள்ள வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதாகவும் பல்வேறு பகுதிகளில் உள்ள ATM  இயந்திரங்களில் இருந்து விரைவாக Read More

Read more

சிகிச்சைபெற வந்த 29 வயது பெண்ணை வன்புணர்வு செய்த மருத்துவர்!!

தான்நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரால் புளியங்குளம் பிரதேசத்தில் நடத்தப்படும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண் ஒருவரை வன்புணர்வு செய்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினரால் மருத்துவர் கைது Read More

Read more

900 வருட பழமை வாய்ந்த “Tower of London” கோட்டையில் கம்பீரமாக பறக்கும் தமிழீழத் தேசியக் கொடி!!

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மத்திய லண்டனில் அமைந்துள்ள Tower of London என்ற 900 வருட பழமை வாய்ந்த கோட்டையில் தமிழீழத் தேசியக் கொடி(Tamil eelam) சாத்திய கல்லறையின் மேல் கார்த்திகை மலர்கள் பொழியும் காட்சி ஒளிவீசிக் காண்பிக்கப்பட்டது. லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்றது. இந்தக் கோட்டை இரு உலகப்போர்களிலும் இறந்த பிரித்தானிய மற்றும் சக தோழமை நாடுகளின் வீரர்களுக்கு poppy மலர்களால் அஞ்சலி செய்யும் ஒரு பிரபல Read More

Read more