FEATURED

FEATUREDLatestNews

அதிகரிக்கும் விபத்துகள் : காவல்துறைக்கு பறந்த உத்தரவு

விபத்துகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நீண்ட தூர பேருந்து சேவைகளில், இரவு நேரங்களில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட தூர பேருந்துகளை ஆய்வு செய்வதற்காக இரவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருத்தமான இடங்களில் அதிகாரிகள் குழுக்களை நிறுத்தி , பேருந்துகளை ஆய்வு செய்யவும் திட்டங்கள் Read More

Read More
FEATUREDLatestNews

கூரை வேய்ந்து கீழே விழுந்தவருக்கு நேர்ந்த துயரம்

புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூரை வேய்வதற்கு சென்று கீழே விழுந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 8ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி கூரை வேய்வதற்கு சென்றுள்ளார். இதன்போது தவறுதலாக கூரையில் இருந்து விழுந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு Read More

Read More
FEATUREDLatestNews

தேர்தல் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு (Elections Commission – Sri Lanka) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, ஊழியர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், ஊழியருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களது நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் Read More

Read More
FEATUREDLatestNews

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி… 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி நாலாவில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்குள்ள சர்ஜீவன் பொதுப்பகுதி வழியாக 2 முதல் 3 தீவிரவாதிகள் இன்று காலை ஊடுருவ முயன்றனர். அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உடனே தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உடனே தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்பினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு Read More

Read More
FEATUREDLatestNews

“மோடியிடம் சொல்..” பெண்ணின் கண்முன்னே கணவரைக் கொன்று பயங்கரவாதிகள் சொல்லி அனுப்பிய செய்தி

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. பெஹல்காமில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் மனைவி, மகன் கண்முன்னே கர்நாடகாவின் சிவ்மொஹாவை சேர்ந்த மஞ்சுநாத் என்ற தொழிலதிபரையும் பயங்கரவாதிகள் Read More

Read More
FEATUREDLatestNews

பஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் கணவனை இழந்த மனைவி – மனதை உலுக்கும் புகைப்படம்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் Read More

Read More
FEATUREDLatestSports

IPL வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்து கே.எல். ராகுல் சாதனை

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் Read More

Read More
FEATUREDLatestNews

கோழைத்தனமான வன்முறை- காஷ்மீர் தாக்குதலுக்கு விஜய் கண்டனம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதில் வெளிநாட்டு பயணிகளும் அடங்குவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஜம்மு-காஷ்மீரின் Read More

Read More
FEATUREDLatestNews

பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்கள் வெளியீடு

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தவர்களின் விவரங்களை ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More
FEATUREDLatestNewsSri Lanka

ஏப்ரல் மாதம் 15 நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா..!

நடப்பு ஏப்ரல் மாதத்தில் இலங்கை(sri lanka) ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதன்படி ஏப்ரல் 2025 இன் முதல் 15 நாட்களில் 93,915 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதன்படி இந்தியா(india) 18,220 (19.4%) முதலிடத்திலும், இங்கிலாந்து (england)11,425 (12.2%) இரண்டாமிடத்திலும் ரஷ்ய கூட்டமைப்பு(russia) 8,705 (9.3%) மூன்றாம் இடத்திலும் உள்ளன. இலங்கை இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 816,191 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 38% Read More

Read More