நீக்கப்படவுள்ள சட்டமூலம்….. பேருந்து கட்டணங்களில் குறைவு!!
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்திருந்தது.
இந்நிலையில்,
தற்பொழுது குறித்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து அமைச்சு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய,
இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு குறித்த சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால்,
34 ரூபாவாகவுள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 29 ரூபாவாக குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.