ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றம்! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறையொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த புதிய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இணைய வழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் அதே வழியில் திறனை வளர்த்துக் கொள்கிறார்களா என்ற பிரச்சினையின் காரணமாக புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.