“அருண்மொழி வர்மன் இராஜராஜன் ஆகிறான்” ‘பொன்னியின் செல்வன்’ அடுத்த Update….. கொண்டாடும் ரசிகர்கள்!!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்“.

இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன்படத்தின் Teaser ஐ பார்வையிட இங்கே அழுத்துங்கள்………. 

ஆனால்,

இப்படத்தின் ‘அருண்மொழி வர்மன்‘ கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியான போது பலரும் ‘அருள்மொழி வர்மன்‘ என்பது தான் சரியான பெயர் என பல கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,

‘பொன்னியின் செல்வன்’ படக்குழு ‘அருண்மொழி வர்மன் இராஜராஜன் ஆகிறான்‘ என்ற தலைப்பில்

அருண்மொழி வர்மன் பெயர் விளக்கத்தையும் அவர் எப்படி ராஜ ராஜ சோழன் என்று அழைக்கப்படுகிறார் என்பதை

பற்றியும் வரலாற்றாசிரியர், எழுத்தாளர் உள்ளிட்ட சிலர் விவரிக்கும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘அருண்மொழி வர்மன் இராஜராஜன் ஆகிறான்’ Video வை பார்வையிட இங்கே அழுத்துங்கள்………

இந்த வீடியோ,

சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு படக்குழு ‘சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம்‘ என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

‘சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம்’ Video வை பார்வையிட இங்கே அழுத்துங்கள்……… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *