மற்றுமோர் அதிவிசேட வர்த்தமானி வெளியானது!!!!
உணவுப்பதார்த்தங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் வேறு வகையான எண்ணெய்களை கலப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
இதன்படி தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், உற்பத்தியாளர்கள் மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்றவர்களுக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.