கொழும்பில் மீண்டும் சற்று பதற்றம் ….. குவிக்கப்பட்டுள்ள காவல்படை!!

கொழும்பு ஆமர் வீதியில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எரிவாயு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில்   இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் எரிவாயு கோரி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை,

இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – ஆட்டுபட்டித்தெரு பகுதியிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள் தமக்கு எரிவாயு பெற்றுத் தருமாறு கோரியிருந்தனர்.

எரிவாயுவை பெற்றுத் தரக்கோரி இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மீண்டும் சற்று பதற்றமான சூழல் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் வீதி மறிக்கப்பட்டு மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமக்கு எரிவாயு பெற்றுத் தருமாறு கோரியே இந்த போராட்டத்தை மக்கள் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில்,

எரிவாயு பெற்றுக் கொடுக்கப்படுமாக இருந்தால் வீதியிலிருந்து விலகி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிவக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *