4.7 கோடி பேரின் பசி துயரை துடைக்க….. உக்ரைனில் இருந்து நீண்ட நாட்களின் பின்னர் புறப்பட்ட தானிய கப்பல்கள்!!

உக்ரைன் துறைமுகங்களில் இருந்து மேலும் நான்கு தானிய கப்பல்கள் லெபனானுக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.

இந்தநிலையில்,

உக்ரைனில் இருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் ஒப்பந்தம் ரஷ்யா உக்ரைன் இடையே ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையெழுத்தானது.

அதன் கீழ்,

உக்ரைனில் இருந்து முதல்முறையாக உணவு தானிய கப்பல் லெபனானை நோக்கி கடந்த 01 ஆம் திகதி புறப்பட்டதுடன் மேலும் 4 கப்பல்கள் உக்ரைன் துறை முகங்களில் இருந்து லெபனானுக்கு செல்கிறது.

இதன் மூலம்,

பசியால் வாடும் 4.7 கோடி பேரின் துயரை துடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *