22 வயது யுவதி கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை!!

கம்பளையில் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா முனவ்வரா என்பவரின் பிரேதப் பரிசோதனை

கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சிவசுப்ரமணியத்தினால் இன்று (14/05/2023) நடைபெற்றது.

கழுத்தை நெரித்ததால் தான் மரணம் என்றும், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளை வெலிகல்ல – எல்பிட்டிய பகுதியை சேர்ந்த 22 வயதான

பாத்திமா முனவ்வரா படுகொலை செய்யப்பட்டமை அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த வாரம் காணாமல் போயிருந்து யுவதியின் சடலம் நேற்று(14/05/2023) மீட்கப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரி சிவசுப்ரமணியம் பரிசோதனையை முன்னெடுத்திருந்தார்.

இதேவேளை,

யுவதியை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று(15/05/2023) காவல்துறையினர் கம்பளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *