20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் சிரமம்….. உபுல் ரோஹண!!

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த வாரம் நாட்டின் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடரவுள்ள மாணவர்கள் பலர் எழுத்துபூர்வ அல்லது பிற ஆவணங்களுடன் விரும்பிய தடுப்பூசியை பெற முயற்சிப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண தெரிவித்தார்.

வெளிநாடு செல்ல விரும்பும் பலர் அந்த நாடுகளினால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி பெற விரும்புகின்ற போதிலும் தம்மால் அவர்கள் விரும்பிய தடுப்பூசிகளை வழங்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *