ATM இயந்திரத்தை உடைத்து 10,655,000 ரூபா கொள்ளை!!

காலி, ஹிக்கடுவை, பத்தேகம நகரங்களில் உள்ள மக்கள் வங்கியின் பணம் மீளப்பெறல் கணனி இயந்திர கட்டமைப்பை உடைத்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையிட்ட வெளிநாட்டவர்கள் சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த பணம் மீளப்பெறல் இயந்திரங்களில் ஒன்றில் 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாவும்

மற்றுமொரு இயந்திரத்தில் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவும் மேலும் ஒரு இயந்திரத்தில் 57 லட்சம் ரூபாவும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

மூன்று நகரங்களில் உள்ள பணம் மீளப்பெறல் இயந்திரங்களில் ஒரே விதமாக கொள்ளை   விசேட அம்சம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனால்,

வெளிநாட்டவர்களான ஒரே குழுவினரே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய காலி, ஹிக்கடுவை மற்றும் பத்தேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு வெளிநாட்டவர்கள்  பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றின் பணம் மீளப்பெற இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயற்சித்தமை தொடர்பான தகவல் வெளியாகி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *